

மதனகோபால சுவாமி கோவிலில் நேற்று கோ பூஜை நடந்தது. இதையொட்டி மூலவர் பெருமாளுக்கு திருமஞ்சனமும், மகாதீபாராதனையும் நடந்தது. இதைத்தொடர்ந்து பசுவிற்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளையும், பசுவையும் வழிபட்டனர். மேலும் இளம்பெண்கள் பஞ்சபாண்டவர் சன்னதியில் உள்ள ஆண்டாள் சிலை முன்பு திருப்பாவை பாசுரங்களை பாடி, தங்களது வேண்டுதல் நேர்த்தி வழிபாட்டை தொடங்கினர்.