கள்ளக்குறிச்சி அருகே 10 ஆடுகள் திருட்டு

கள்ளக்குறிச்சி அருகே 10 ஆடுகள் திருடு போனது.
கள்ளக்குறிச்சி அருகே 10 ஆடுகள் திருட்டு
Published on

தியாகதுருகம் அருகே சித்தலூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 36). இவர் சொந்தமாக வளர்த்துவரும் ஆடுகளை வீட்டுக்குவெளியே கட்டி வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு இவர்கள் வீட்டில் தூங்கினர். அப்போது அவர்களது வீட்டு கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு, அங்கிருந்த 8 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.

அதிகாலை 3 மணிக்கு செந்தில் குடும்பத்தினர் எழுந்து பார்த்த போது, கதவை திறக்கமுடியவில்லை. அருகில் வசிப்பவர்கள் திறந்த விட்ட பின்னரே அவர்கள் வெளியே வந்தனர். இதேபோன்று செந்திலின் வீட்டுக்கு அருகே வசித்தவர் வீட்டில் இருந்தும் 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com