நாமக்கல்லுக்குசரக்கு ரெயிலில் 1,250 டன் கடுகு புண்ணாக்கு வந்தது

நாமக்கல்லுக்குசரக்கு ரெயிலில் 1,250 டன் கடுகு புண்ணாக்கு வந்தது
Published on

நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தீவன மூலப்பொருட்கள் வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரெயில் மூலம் வாங்கி வரப்படுகின்றன. அந்த வகையில் நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 1,250 டன் கடுகு புண்ணாக்கு சரக்கு ரெயில் மூலம் நாமக்கல் கெண்டு வரப்பட்டன.

இந்த கடுகு புண்ணாக்கு மூட்டைகள் நாமக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றப்பட்டு, கோழித்தீவன அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com