சென்னை: மதுபான கடையில் தீ விபத்து; ரூ.9 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

சென்னை, கேகே நகர் மதுபான கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.9 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பொருட்கள் எரிந்து நாசமானது.
சென்னை: மதுபான கடையில் தீ விபத்து; ரூ.9 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்
Published on

போரூர்:

சென்னை கே.கே நகர் ராஜமன்னார் சாலையில் அரசு டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இரவு 10 மணி அளவில் வழக்கம் போல ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர். இந்த நிலையில் அதிகாலை 5 மணி அளவில் கடையில் இருந்து கரும்புகை கிளம்பியது. பின்னர் சிறிது நேரத்தில் தீப்பிடித்து மள மளவென எரிய தொடங்கியது.

இதை கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்கள் அசோக் நகர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மதுபான கடை அருகில் உள்ள பார் ஊழியர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அனைத்தனர்.

இதில் கடையில் இருந்த ஏராளமான மதுபாட்டில்கள் வெடித்து சிதறியது. மேலும் அங்கிருந்த "ப்ரீசர் பாக்ஸ்" உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் கருகி நாசமானது. இதன் மதிப்பு ரூ9 லட்சம் ஆகும்.

இதுகுறித்து கடையின் சூப்பர்வைசர் ராமதுரை கே.கே நகர் போலீசில் புகார் அளித்தார். கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் ஏற்பட்ட மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டது, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com