அரசு பஸ்- மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி

ஆரல்வாய்மொழியில் அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
அரசு பஸ்- மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
Published on

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழியில் அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

தொழிலாளி

ஆரல்வாய்மொழி கீரைதோட்டம் பகுதியை சேர்ந்தவர் வில்சன். இவருடைய மகன் காட்சன் டேனியல் (வயது22), தொழிலாளி. இவர் நேற்று மாலையில் நாகர்கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் அருகே திருப்பத்தில் எதிரே ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.

பரிதாப சாவு

இதில் காட்சன் டேனியல் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் வாலிபரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி சப்-இன்ஸ்பெக்டர் கீதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் ஆகியோர் அங்கு வந்து உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com