சென்னையில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 8 பேர் காயம்

வேளச்சேரி, தண்டீஸ்வரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் 8 பேர் காயமடைந்தனர்.
சென்னை ,
சென்னை வேளச்சேரி அருகே பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதே சமயம் எதிரில் மற்றொரு பேருந்து பயணிகளுடன் வந்துகொண்டிருந்தது.
இந்த நிலையில், பேருந்து தண்டீஸ்வரம் அருகே வந்துகொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மற்றொரு அரசு பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் மற்றும் 7 பயணிகள் காயமடைந்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனைதொடர்ந்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






