அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆலங்காயத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்து, திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்தில் எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பில் பங்கேற்க வந்த ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் போராடிவரும் ஆசிரியர்களை அரசு உடனடியாக அழைத்து பேச வலியுறுத்தி ஆலங்காயம் அரசு மேல்நிலை நிலைப்பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com