'தமிழ்நாட்டில் எழும் பல்வேறு சர்ச்சைகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவியே காரணமாக இருந்து கொண்டிருக்கிறார்' - ப.சிதம்பரம்

சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 5 மாதங்களாக துணைவேந்தர் இல்லாமல் இருப்பதற்கு காரணம் கவர்னர்தான் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
'தமிழ்நாட்டில் எழும் பல்வேறு சர்ச்சைகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவியே காரணமாக இருந்து கொண்டிருக்கிறார்' - ப.சிதம்பரம்
Published on

சென்னை,

தமிழகத்தில் கவர்னரே பல சர்ச்சைகளின் மையமாக இருப்பது ஏன்? என முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர், 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

"1857-ல் நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் மூன்று பல்கலைக்கழகங்களில் ஒன்றான சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 5 மாதங்களாக துணைவேந்தர் இல்லாத நிலை உள்ளது. இதற்கு கவர்னர்-அரசு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைதான் காரணம்.

தமிழகத்தில் கவர்னரே பல சர்ச்சைகளின் மையமாக இருப்பது ஏன்? மேலும் அவர்தான் பல சர்ச்சைகளுக்கு காரணம் என்றும் சிலர் கூறுகின்றனர். நாட்டின் உயர்கல்வியின் நிலை குறித்த வருத்தமான தகவல் இது."

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com