அரசு கலை, அறிவியல் பட்டப்படிப்பு- மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு நாளையுடன் நிறைவு

மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மே 24-ந்தேதி (நாளை) வரை நீட்டித்து கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டது.
அரசு கலை, அறிவியல் பட்டப்படிப்பு- மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு நாளையுடன் நிறைவு
Published on

சென்னை,

தமிழக உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், பி.எஸ்சி., பி.ஏ., பி.காம். பட்டப்படிப்பில் பல்வேறு பாடப்பிரிவுகளில் 1.07 லட்சம் இடங்கள் உள்ளன. இதற்கான, 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 6-ந்தேதி தொடங்கியது.

இதற்கிடையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு விணணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த 20-ந்தேதியுடன் நிறைவு பெறுவதாக இருந்தது. ஆனால், மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மே 24-ந்தேதி (நாளை) வரை நீட்டித்து கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டது.

இன்று மாலை 6 மணி நிலவரப்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு, 2 லட்சத்து 52 ஆயிரத்து 406 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. அதில், 2 லட்சத்து 5 ஆயிரத்து 145 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர். இந்தநிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவு பெறுகிறது. அதன்படி, மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com