இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

வந்தவாசியில் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
Published on

வந்தவாசி

சேத்துப்பட்டு பழம்பேட்டையைச் சேர்ந்த வேலு என்பவரின் மகன் விக்னேஷ் என்ற விக்னேஷ்குமார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு அரசு பஸ் மோதியதில் உயிரிழந்தார். இதையடுத்து இழப்பீடு கோரி செய்யாறு சார்பு கோர்ட்டில் அவரது தாய் ஆதிலட்சுமி வழக்கு தொடுத்தார்.

இதில் ஆதிலட்சுமிக்கு ரூ.15 லட்சத்து 20 ஆயிரம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இதையடுத்து அரசு பஸ்சை ஜப்தி செய்யுமான கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து காஞ்சீபுரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்தவாசி வழியாக இன்று சென்ற அரசு பஸ்சை வந்தவாசி கோட்டை மூலை அருகில் நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து செய்யாறு கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com