பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
Published on

வேதாரண்யத்தில் போலீஸ் துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமை தாங்கினார். வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் வரவேற்றார். முகாமில் வேதாரண்யம், வாய்மேடு, கரியாப்பட்டினம், தலைஞாயிறு, வேட்டைகாரன் இருப்பு ஆகிய போலீஸ் நிலையங்களில் தீர்க்கப்படாமல் இருந்த 100-க்கும் மேற்பட்ட மனுக்களில் 51 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. முகாமில் போலீஸ் நிலையங்களில் பெறப்படும் மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கூறினார். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுப்ரியா, கன்னிகா, நாகாரத்தினம், செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com