மின்வாரிய கோட்ட அலுவலகங்களில் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

மின்வாரிய கோட்ட அலுவலகங்களில் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
மின்வாரிய கோட்ட அலுவலகங்களில் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
Published on

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி பெருநகரம் மேற்பார்வை பொறியாளர் பிரகாசம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மின்பகிர்மான வட்டத்தை சேர்ந்த கோட்ட அலுவலகங்களில் இந்த மாதம் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. கூட்டம் நடைபெறும் இடங்கள் விவரம் வருமாறு:-

துறையூர் கோட்டத்தில் நாளையும்(செவ்வாய்க்கிழமை), ஸ்ரீரங்கம் கோட்டத்தில் 9-ந் தேதியும், லால்குடி கோட்டம் 13-ந் தேதியும், திருச்சி கிழக்கு 16-ந் தேதியும், திருச்சி நகரிய கோட்டத்தில் 20-ந் தேதியும், மணப்பாறை கோட்டத்தில் 27-ந் தேதியும் கூட்டம் நடக்கிறது. மேற்குறிப்பிட்ட நாட்களில் நடைபெறும் கூட்டத்தில் மின்நுகர்வோர்கள் தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com