குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
Published on

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டினம் திப்புசுல்தான் தெருவை சேர்ந்தவர் அப்துல்ஜாபர். இவருடைய மகன் சுகர்னோ (வயது30). இவர்மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து சுகர்னோவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் சேதுபாவாசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல், குண்டர் சட்டத்தில் சுகர்னோவை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com