சுந்தர சுவாமி அதிஷ்டானத்தில் குருபூஜை

சுந்தர சுவாமி அதிஷ்டானத்தில் குருபூஜை நடந்தது.
சுந்தர சுவாமி அதிஷ்டானத்தில் குருபூஜை
Published on

அரிமளம்:

அரிமளம் பேரூராட்சியில் உள்ள கோடகநல்லூர் சுந்தரசுவாமி அதிஷ்டானத்தில் மாதாந்திர குருபூஜை விழா நடைபெற்றது. இதையொட்டி கலச பூஜையை தொடர்ந்து, சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. இதையடுத்து லிங்க வடிவிலான சுந்தர சுவாமியின் ஜீவ சமாதியில் வெள்ளியங்கி சாற்றப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com