சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிக்கு குருபூஜை

சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிக்கு குருபூஜை நடைபெற்றது.
சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிக்கு குருபூஜை
Published on

விராலிமலை சந்தைப்பேட்டை அருகே வன்னி மரத்தடியில் சத்ரு சம்ஹார மூர்த்தி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 15-ந்தேதி பரணி நட்சத்திரத்தில் குருபூஜை விழாவானது விமரிசையாக நடைபெறும். 85-வது குருபூஜை விழாவையொட்டி நற்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து இன்று காலை விராலிமலை தெப்பக்குளத்தில் இருந்து பக்தர்கள் தீர்த்த குடத்தை முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். அதன் பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அன்னவாசல் அருகே தான்றீஸ்வரம், வாதிரிப்பட்டி, காலாடிப்பட்டி சத்திரம் ஆகிய இடங்களில் சத்ரு சம்ஹாரமூர்த்தி சுவாமி கோவில்கள் உள்ளன. இக்கோவிலில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் பால்குடம், கரும்பு தொட்டில், மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com