குட்கா விவகாரத்தில் மாநில அரசையோ- காவல் துறையையோ நீதிமன்றம் குற்றம் சாட்டவில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

குட்கா விவகாரத்தில் மாநில அரசையோ- காவல் துறையையோ நீதிமன்றம் குற்றம் சாட்டவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். #Jayakumar #GutkhaScam
குட்கா விவகாரத்தில் மாநில அரசையோ- காவல் துறையையோ நீதிமன்றம் குற்றம் சாட்டவில்லை - அமைச்சர் ஜெயக்குமார்
Published on

சென்னை

அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது திமுகவுக்கு கிடைத்த வெற்றி அல்ல. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்றுதான் திமுக கேட்டது . சிபிஐ விசாரணை நடத்தினாலும் மாநில போலீசாரின் ஒத்துழைப்பு அவசியம்.

குட்கா விவகாரத்தில் மாநில அரசு மற்றும் காவல்துறையை நீதிமன்றம் குற்றம்சாட்டவில்லை. குட்கா விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யாது, சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com