துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி

துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி
Published on

திருப்புவனம், 

தமிழக அரசு சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் திருப்புவனத்தில் ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் தலைமையில் நகரின் பல பகுதிகளில் கட்சியினர் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கடம்பசாமி, வசந்தி சேங்கைமாறன், யூனியன் துணை சேர்மன் மூர்த்தி, பேரூராட்சி துணை தலைவர் ரகமத்துல்லாகான், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொற்கோ, ஒன்றிய நிர்வாகிகள் ராமலிங்கம், ஈஸ்வரன், சுப்பையா, மகேந்திரன், மீனாட்சிசுந்தரம், சேகர், கோபால் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com