தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
Published on

நெல்லை அருகே உள்ள தாமரைசெல்வி தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் நித்ய கிரேசன் (வயது 40). கூலி தொழிலாளி. இவர் மணக்கரையில் உள்ள குடும்ப கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால் மனமுடைந்து காணப்பட்டாராம். இந்த நிலையில் அவர் நேற்று காலையில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com