தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

வேலூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
Published on

வேலூரை அடுத்த அன்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் வினோத் (வயது 32). இவர் லாரிக்கு பாடி கட்டும் வேலை செய்து வந்தார். வினோத் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று இரவு 9 மணியளவில் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டதாக கூறப்படுகிறது.

இதைக்கண்ட குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் வினோத்தை பரிசோதனை செய்தபோது இறந்துபோனது தெரிய வந்தது.

இதையடுத்து விரிஞ்சிபுரம் போலீசார் அங்குசென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்துபோன வினோத்துக்கு சரண்யா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com