உலகெங்கும் வாழும் மலையாள சொந்தங்களுக்கு ஓணம் வாழ்த்துகள்: முதல்-அமைச்சர் விஜய்

அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள் வாழ்க்கை பொலிவு பெறட்டும்!
முதல்-அமைச்சர் விஜய்
Published on

சென்னை,

ஓணம் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி, தமிழக முதல் - அமைச்சர் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, முதல்-அமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:-

வாழ்த்துகள்

உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்.

கேரளம் மாநிலத்தின் அறுவடைத் திருநாளாம் ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும்! அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள் வாழ்க்கை பொலிவு பெறட்டும்!

அன்பைப் பரிமாறி, மகிழ்ச்சியைக் கொண்டாடி, ஒற்றுமையைப் போற்றும் இத்திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com