

கடையநல்லூர்:
கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான இடைகால், நயினாரகரம், கொடிக்குறிச்சி, போகநல்லூர், வலசை, கம்பனேரி மங்களாபுரம் ஆகிய ஊர்களில் நேற்று மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த இந்த மழையால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.