தமிழகத்தில் கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Published on

சென்னை,

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 9 மாவட்டங்களில் ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோவையில் பள்ளிகளுக்கும், சேலம், ராணிப்பேட்டை, விழுப்புரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com