இடி-மின்னலுடன் பலத்த மழை

இடி-மின்னலுடன் பலத்த மழை சோளிங்கரில் இடி-மின்னலுடன் பலத்த மழை செய்தது.
இடி-மின்னலுடன் பலத்த மழை
Published on

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கல்பட்டு. சோமசமுத்திரம், ஈடிகைபெண்டை, எரும்பி, கீழாண்ட மோட்டூர், கொண்டபாளையம், எசையனூர், பத்மாபுரம், பில்லாஞ்சி, புத்தேரி உள்ளிட்ட கிராமங்களில் காலை முதல் கடும் வெயில் அடித்தது. மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 7.45 மணியில் இருந்து சுமார் 1 மணிநேரம் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சாலைகளிலும், தெருக்களிலும் மழை வெள்ளம் ஓடியது. தொடர்ந்து அவ்வப்போது மழை பொய்தது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com