இடி-மின்னலுடன் பலத்த மழை

சோளிங்கரில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இடி-மின்னலுடன் பலத்த மழை
Published on

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று சோளிங்கர், எரும்பி, கல்பட்டு, சோமசமுத்திரம், மோட்டூர், கொண்டபாளையம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இதந் காரணமாக சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நகராட்சிக்குட்பட்ட ஏரிக்கரை விநாயகர் கோவில், போர்டின் பேட்டை, அர்ஜுன ரெட்டி தெரு, மார்க்கெட் தெரு, குட்டை தெரு, லிங்காரெட்டி தெரு, செங்குந்தர் ஒத்தவாடை தெரு ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பாட்டி குளம் பகுதியில் உள்ள கால்வாய் வழியாக அரசு கால்நடை மருத்துவமனை அருகே உள்ள ஓடை கால்வாயில் சென்றடையும். பாட்டி குளம் கால்வாய் முறையாக பராமரிக்கப்படாததால் மழைநீரும், கழிவு நீரும் கலந்து முருகா ரெட்டி தெருவில் முழங்கால் அளவுக்கு தேங்கியது.

இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். மழைநீரில் கழிவுநீர் கலந்ததால் தெரு முழுவதும் துர்நாற்றம் வீசியது. நகராட்சி நிர்வாகம் முறையான மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com