ஊரடங்கு காலத்தில் 90 சதவீத மின் கட்டணத்தை செலுத்த தொழிற்சாலைகளுக்கு மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு ரத்து - உயர்நீதிமன்றம் உத்தரவு

ஊரடங்கு காலத்தில் 90 சதவீத மின் கட்டணத்தை செலுத்தும்படி தொழிற்சாலைகளுக்கு மின்வாரியம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தில் 90 சதவீத மின் கட்டணத்தை செலுத்த தொழிற்சாலைகளுக்கு மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு ரத்து - உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on

சென்னை,

நாடு முழுவதும் கொரோனா பரவல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சுமார் 3 மாதங்களாக தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தன. அதனை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கின. இதன் பின்னர் தமிழக மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஊரடங்கு காலத்தில் 90 சதவீத மின் கட்டணத்தை செலுத்தும்படி தொழிற்சாலைகளுக்கு உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து தொழிற்சாலைகளுக்கு அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக நூற்பாலைகள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் சங்கங்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஊரடங்கு காலத்தில் 90 சதவீத மின் கட்டணத்தை செலுத்தும்படி தொழிற்சாலைகளுக்கு மின்வாரியம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் கொரோனா ஊரடங்கு காலம் முடியும் வரை தொழிற்சாலைகளுக்கு குறைந்த அளவே மின்கட்டணம் வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com