எஸ்.ஐ., தீயணைப்பு அதிகாரிகள் பணியிட இறுதி தேர்வுப் பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு

ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தயாரித்த தேர்வுப் பட்டியலில் எந்தக் குறையும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை
எஸ்.ஐ., தீயணைப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கான இறுதி தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில், "ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தயாரித்த தேர்வுப் பட்டியலில் எந்தக் குறையும் இல்லை. எனவே தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 621 போலீஸ் எஸ்.ஐ.க்கள், 129 தீயணைப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கான இறுதி தேர்வுப் பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






