திருப்பூரில் பெரும் பரபரப்பு.. இந்து முன்னணி நிர்வாகி நடுரோட்டில் வெட்டிக்கொலை

திருப்பூர் குமாரானந்தபுரத்தை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி பாலமுருகன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூரில் பெரும் பரபரப்பு.. இந்து முன்னணி நிர்வாகி நடுரோட்டில் வெட்டிக்கொலை
Published on

திருப்பூர் குமாரானந்தபுரத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் நடுரோட்டில் ஓட ஒட வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொலை செய்யப்பட்ட பாலமுருகன் இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றிய தலைவராக இருந்து வந்தார்.

நள்ளிரவில் மூன்று பேர் கொண்ட கும்பலால் பாலமுருகன் கொலை செய்யப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com