புனித அடைக்கல அன்னை ஆலய தேர் பவனி

புனித அடைக்கல அன்னை ஆலய தேர் பவனி நடைபெற்றது.
புனித அடைக்கல அன்னை ஆலய தேர் பவனி
Published on

ஆலங்குடி அருகே வேங்கிடகுளம் புனித அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. ஆலயத்தில் கடந்த 11-ந் தேதி ஆலய பங்கு தந்தை பாபியன் கூட்டுப் பாடல் திருப்பலி பூஜையு டன் கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, தினந்தோறும் கிராம பொதுமக்களால் காலை முதல் மாலை வரை தேர் பவனி மற்றும் நவநாள் திருப்பலி, மன்றாட்டு பாடல் பாடி கலை நிகழ்ச்சி நடந்தது. வேங்கிடகுளம் பங்குத்தந்தை பபியான் மற்றும் கிராம பங்கு தந்தையர்கள் அருட்சகோதரிகள் விழா கூட்டுப்பாடல் திருப்பலியுடன் தேர்பவனி நடந்தது. இதனை தொடர்ந்து, சிறுமிகளுக்கு முதல் திருவிருந்து நடைபெற்றது. தொடர்ந்து, நடந்த தேர் பவனி நான்கு வீதிகள் வழியாக சுற்றி வந்து கோவிலை வந்தடைந்தது. இதில் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பங்கு தந்தையர்கள், அருட் சகோதரிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com