குதிரை, மாட்டு வண்டி எல்கை பந்தயம்

அறந்தாங்கி அருகே குதிரை, மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
குதிரை, மாட்டு வண்டி எல்கை பந்தயம்
Published on

மாட்டு வண்டி எல்கை பந்தயம்

அறந்தாங்கி அருகே வைரிவயல் கிராமத்தில் வீரமுனி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு 83-ம் ஆண்டாக மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகள் கலந்து கொண்டன.

இதில் 4 பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 12 ஜோடி மாட்டு வண்டிகளும், கரிச்சான் மாடுகள் பிரிவில் 26 ஜோடி மாட்டு வண்டிகளும், கரிச்சான் குதிரை பிரிவில் 15 குதிரை வண்டிகளும், பூஞ்சிட்டு குதிரை பிரிவில் 20 குதிரை வண்டிகளும் பந்தயத்தில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது.

குதிரை வண்டி பந்தயம்

இதைதொடர்ந்து மாலையில் நடுமாடுபிரிவில் 12 ஜோடி மாட்டு வண்டிகளும், பூஞ்சிட்டு மாடுகளில் 2 பிரிவுகளாக 30 ஜோடி மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன. நடுக்குதிரை பிரிவில் 12 ஜோடி குதிரை வண்டிகளும் கலந்து கொண்டன.

குதிரைகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிக்கு கொடி பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. சாலையின் இரு புறங்களிலும் ரசிகர்களும், பொதுமக்களும் திரண்டு நின்று பந்தயத்தை கண்டு ரசித்தனர். அறந்தாங்கி போலீசார் மற்றும் ஊர்க்காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை வைரிவயல் கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com