மதுவில் விஷம் கலந்து குடித்த ஓட்டல் காவலாளி சாவு

மதுவில் விஷம் கலந்து குடித்த ஓட்டல் தொழிலாளி பலியானார்.
மதுவில் விஷம் கலந்து குடித்த ஓட்டல் காவலாளி சாவு
Published on

கொண்டலாம்பட்டி:

ஓமலூர் தாலுகா கோட்டைமேட்டு பட்டியை சேர்ந்தவர் ரவி (வயது 50). இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு இவர் மனைவியை பிரிந்து பெரிய புத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டார். இந்த நிலையில் இவர் கொண்டலாம்பட்டியில் உள்ள ஒரு ஓட்டல் கடையில் காவலாளியாக வேலை பார்த்தார். இதனிடையே கடந்த 2-ந் தேதி பெரிய புத்தூரில் உள்ள சுடுகாட்டில் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அவரது உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு கொண்டலாம்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரவி, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com