ஆலங்குளத்தில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி

ஆலங்குளத்தில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
ஆலங்குளத்தில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி
Published on

ஆலங்குளம்:

ஆலங்குளத்தில் பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகே சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு தலைமை தாங்கினார். தமிழ் புலிகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் கார்த்திக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனார். இதில் காங்கிரஸ், விடுதலைகள் சிறுத்தை கட்சி, திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com