மகாதானபுரத்தில் இன்று மனுநீதி நாள் முகாம்

மகாதானபுரத்தில் மனுநீதி நாள் முகாம் இன்று நடக்கிறது.
மகாதானபுரத்தில் இன்று மனுநீதி நாள் முகாம்
Published on

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிந்தலவாடி குறுவட்டம், மகாதானபுரம் தெற்கு கிராமத்தில் இன்று (புதன்கிழமை) மதியம் 3 மணியளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் பல்வேறு அரசு துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு அவர்களது துறை சார்பான நலத்திட்ட உதவிகள் பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைக்க உள்ளனர். மேலும் மருத்துவ முகாம், அரசுத்துறை சார்பில் கண்காட்சி ஆகியவை நடைபெறுகிறது. எனவே, மகாதானபுரம் தெற்கு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மனுநீதி நாள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com