பெண்ணுக்கு ஜீவனாம்சம் தர மறுத்த கணவர் கைது

பெண்ணுக்கு ஜீவனாம்சம் தர மறுத்த கணவர் கைது செய்யப்பட்டார்.
பெண்ணுக்கு ஜீவனாம்சம் தர மறுத்த கணவர் கைது
Published on

வாடிப்பட்டி

கருத்து வேறுபாடு

சோழவந்தான் திருவேடகத்தை சேர்ந்தவர் காயத்திரி (38). இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள வீரசின்னம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன்(40) என்பவருக்கும் 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீதிமன்றம் மூலம் விவாகரத்து செய்யப்பட்டது. மேலும் வாடிப்பட்டி கோர்ட்டில் ஜீவனாம்சம் கோரி காய்த்திரி மனுதாக்கல் செய்தார்.

கைது

இந்த வழக்கில், மாதந்தோறும் காய்த்திரிக்கும், பெண் குழந்தைகளுக்கும் ரூ.20 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்கவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் ராஜேந்திரன் ஜீவனாம்சம் கொடுக்காமல் இருந்து வந்தார். இதையடுத்து வாடிப்பட்டி கோர்ட்டு ராஜேந்திரனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது.

அந்த உத்தரவுப்படி சாணார்பட்டி போலீசார் ராஜேந்திரனை கைதுசெய்து நேற்று வாடிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி வெங்கடலெட்சுமி, ராஜேந்திரனை 15 நாள்காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com