மனைவியை எரித்து கொன்ற கணவருக்கு ஆயுள்தண்டனை - சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

சென்னையில் மனைவியை எரித்து கொன்ற கணவருக்கு சென்னை மகளிர் கோர்ட்டு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
மனைவியை எரித்து கொன்ற கணவருக்கு ஆயுள்தண்டனை - சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
Published on

சென்னை டி.பி.சத்திரத்தைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 62). இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். ஹரிகிருஷ்ணன் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். கடந்த 20.1.2017 அன்று நடந்த தகராறின் போது தனது மனைவி மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்தார். இதில் பலத்த காயம் அடைந்த சரஸ்வதி உயிரிழந்தார். இதுகுறித்து டிபி.சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிகிருஷ்ணனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள மகளிர் கோர்ட்டில் நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்னிலையில் நடந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் ஆர்த்தி பாஸ்கரன் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி, ஹரிகிருஷ்ணன் மீதான கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com