குளிர்பானத்தில் வோட்கா கலந்து கொடுத்து காதல் மனைவியை நண்பனுக்கு விருந்தாக்கி ரசித்த கணவர்...!

கோவையில் குளிர்பானத்தில் வோட்கா கலந்து கொடுத்து காதல் மனைவியை நண்பனுக்கு விருந்தாக்கி ரசித்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
குளிர்பானத்தில் வோட்கா கலந்து கொடுத்து காதல் மனைவியை நண்பனுக்கு விருந்தாக்கி ரசித்த கணவர்...!
Published on

கோவை,

கோவை மாவட்டம் ஒத்தக்கால்மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன். கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஆதிநாராயணன் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு ஆதிநாராயணன் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் ஆகிய இருவரும் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது மகன் தூங்க சென்ற பிறகு ஆதிநாராயணன் 'மாஸா' குளிர் பானத்தில் வோட்கா மதுபானத்தைக் கலந்து அதை மனைவியின் வாயில் ஊற்றியிருக்கிறார். அதைக் குடிக்க மறுத்து தட்டிவிட்டு மனைவி படுக்கை அறைக்குச் சென்றிருக்கிறார்.

பின்னர், மயங்கிய மனைவியை ஆதிநாராயணன் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் இருவரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மேலும் இதனை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். அப்படி இருந்த போதிலும் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com