“எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்...” - மு.க.ஸ்டாலின் பதிவு

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து சென்றுள்ளார்.
“எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்...” - மு.க.ஸ்டாலின் பதிவு
Published on

சென்னை,

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து சென்ற நிலையில், தனது பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்ப உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

ஜெர்மனியில் தமிழர்கள் அளித்த உற்சாக வரவேற்புடன் தொடங்கிய பயணம், இலண்டன் மாநகரில், அவர்கள் வாழ்த்தி வழியனுப்ப நிறைவுறுகிறது! அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்.

இத்தனை நாளும் தங்கள் சகோதரனாய் என்னை கவனித்துக்கொண்ட தமிழ் சொந்தங்களுக்கு என் அன்பை நன்றியாய் நவில்கிறேன்! என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com