தமிழகம் வாழவேண்டும் என்றால் திமுக வீழவேண்டும்! - எடப்பாடி பழனிசாமி

ஏப்ரல் 23 , உங்கள் ஆட்சிக்கான முடிவுரையை மக்கள் எழுதப் போவது உறுதி என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகம் வாழவேண்டும் என்றால் திமுக வீழவேண்டும்! - எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

ஆலந்தூர் தொகுதி மக்களின் ஆரவாரத்திற்கு இடையே தேர்தல் பிரசாரம் மேற்கொண்டேன். நேற்று முன்தினம் நான் மயிலாப்பூரில் பேசிய கருத்துகளைக் கண்டு பதறிப்போய், மூன்று அமைச்சர்கள் விட்டு பிதற்றிக் கொண்டு இருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

ஆட்சியில் இருக்கும் போது மக்களை மறந்துவிட்டு, இப்போது பதறுவதால் “எந்தப் பயனும் இல்லை”!.. உங்களையும், உங்கள் கட்சியின் காட்டாட்சியையும் மக்கள் தூக்கி எறியத் தயாராக உள்ளனர்.

ஏப்ரல் 23 , உங்கள் ஆட்சிக்கான முடிவுரையை மக்கள் எழுதப் போவது உறுதி !

தமிழகம் வாழவேண்டும் என்றால் திமுக வீழவேண்டும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com