குற்றாலம் ஐந்தருவியில் தண்ணீரின் வேகம் சற்று குறைந்தால், பொதுமக்கள் குளிக்க அனுமதி..!

குற்றாலம் ஐந்தருவியில் தண்ணீரின் வேகம் சற்று குறைந்தால், பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் ஐந்தருவியில் தண்ணீரின் வேகம் சற்று குறைந்தால், பொதுமக்கள் குளிக்க அனுமதி..!
Published on

தென்காசி,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் நேற்று இரவு குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பாதுகாப்பு கருதி அந்த 3 அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்த நிலையில், தொடரும் வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் மெயினருவி, ஐந்தருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை இன்றும் நீடிக்கப்பட்டது. இதனால் நீண்ட நேரமாக காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதனை தொடர்ந்து குற்றாலம் ஐந்தருவியில் தண்ணீரின் வேகம் சற்று குறைந்தால், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com