சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி

சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி
Published on

முதுகுளத்தூர், 

முதுகுளத்தூரில் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் வாவா ராவுத்தர் தலைமை தாங்கினார். நகர தலைவர் சேட் ஜாகிர் உசேன் முன்னிலை வகித்தார். த.மு.மு.க. மாவட்ட செயலாளர் சம்சுகனி, மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாவட்ட துணை செயலாளர் சல்மான் ரபீக் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக இஸ்லாமிய பிரசார பேரவை மாவட்ட பொறுப்பாளர் தாஹிர் சைபுதீன், துரைப்பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் முருகன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பூவலிங்கம், இமாம் அப்துல் மஜீத், ஓம் சக்தி வழிபாட்டு மன்ற குழு தலைவர் பழனிச்சாமி மற்றும் முஸ்தபாபுரம் ஜமாத்தார்களும், வார்டு நிர்வாகிகளும் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜமீல் அகமது நன்றி கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com