15 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை: மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 15 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
15 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை: மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம்
Published on

சென்னை,

தமிழ்நாட்டைச் சேர்ந்த15 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் 5.11.2022 அன்று கைது செய்யப்பட்டது குறித்தும், அவர்களது 2 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறித்தும் உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

தமிழ்நாடு அரசு பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும், பாக் நீரிணை பகுதியில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தடையின்றி தொடர்கிறது. இது பாரம்பரிய மீன்பிடி பகுதியை வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் ஒட்டுமொத்த மீனவ சமூகத்தினரிடையே அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது.

உடனடி விடுதலை

கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய, தூதரக வழிமுறைகள் மூலமாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 100 மீன்பிடி படகுகளை விடுவிக்க நீங்கள் உதவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com