70 மனுக்களுக்கு உடனடி தீர்வு

நாகையில் மனு விசாரணை மேளாவில் 70 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
70 மனுக்களுக்கு உடனடி தீர்வு
Published on

நாகை போலீஸ் சூப்பிரண்டு நேற்று நிருபர்களை சந்தித்தபோது கூறியதாவது:- நாகை மாவட்டத்தில் சாராய, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்துக்கப்பட்டு வருகிறது. அதன்படி நான் பொறுப்பேற்றதில் இருந்து தற்பொழுது வரை கஞ்சா, சாராயம் விற்பனை, கடத்தல் ஆகிய குற்ற செயல்களில் ஈடுபட்ட 11 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதேபோல பொதுமக்கள் குறைகளை தீர்க்க வாரம்தோறும் நாகை, வேதாரண்யம் கோட்டத்துக்குட்பட்டபகுதிகளில் சனிக்கிழமைகளில் மனு விசாரணை மேளா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (அதாவதுநேற்று) நடைபெற்ற மனு விசாரணை மேளாவில் 70 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com