

சென்னை,
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் சொத்து குறித்து கடந்த பிப்ரவரி 12-ந்தேதி ஐகோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த கோரி இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், சொற்பொழிவாளர் மணியன்ஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.