கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு குறித்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகிறது

வரும் கல்வியாண்டிற்கான முழுமையான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிடுகிறார்.
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு குறித்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகிறது
Published on

சென்னை,

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வுகள் முடியும் நிலையில் உள்ளன. அதே சமயம் 9-ம் வகுப்பு வரை ஏற்கனவே தேர்வுகள் முடிந்து தற்போது மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வரும் கல்வி ஆண்டில் மீண்டும் பள்ளிகள் துவங்குவது எப்போது, காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் தேதிகளின் விவரம், 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை உள்பட அனைத்து விவரங்களையும் சென்னையில் இன்று காலை 10 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com