பெண்ணை ஆசைக்கு இணங்க வற்புறுத்தியவர் சிறையில் அடைப்பு

பெண்ணை ஆசைக்கு இணங்க வற்புறுத்தியவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பெண்ணை ஆசைக்கு இணங்க வற்புறுத்தியவர் சிறையில் அடைப்பு
Published on

தேன்கனிக்கோட்டை:-

தேன்கனிக்கோட்டை அண்ணாநகரை பகுதியை சேர்ந்த அங்கமுத்து மகன் அருண்குமார் (வயது 24). இவருக்கு கஞ்சா பழக்கம் இருந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று கஞ்சா போதையில் இருந்த அருண்குமார், கணவரை இழந்த 20 வயது பெண்ணை ஆசைக்கு இணங்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாமிகண்ணு வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com