இம்ப்ரோ சித்த மருந்து விவகாரம்; ஆயுஷ் அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

இம்ப்ரோ சித்த மருந்தில் கொரோனாவை தடுக்கும் திறன் உள்ளதா? என்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஆயுஷ் அமைச்சகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இம்ப்ரோ சித்த மருந்து விவகாரம்; ஆயுஷ் அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
Published on

மதுரை,

மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் எஸ்.சுப்பிரமணியன், கொரோனா வைரசை கட்டுப்படுத்த 66 மூலிகைகள் உள்ளடங்கிய இம்ப்ரோ என்ற பொடியைத் தயாரித்திருந்தார். பின்னர் இந்தப் பொடியை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் சுப்பிரமணியன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் கண்டுபிடித்துள்ள இம்ப்ரோ மருந்தை ஆய்வு செய்வதற்காக சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, அலோபதி மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டனர். அண்மையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்துள்ள புதிய சித்த மருந்து பொடியில் கிருமியை கட்டுப்படுத்தும் சக்தி இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து இருந்தது.

இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த மதுரை ஐகோர்ட் கிளை, இம்ப்ரோ மருந்தில் கொரோனாவை தடுக்கும் திறன் உள்ளதா என்று ஆய்வு செய்து ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆயுஷ் அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com