திருமணமான 1½ மாதத்தில் இளம்பெண் மயங்கி விழுந்து திடீர் சாவு

உத்தமபாளையத்தில் திருமணமான 1½ மாதத்தில் இளம்பெண் மயங்கி விழுந்து திடீரென இறந்தார்
திருமணமான 1½ மாதத்தில் இளம்பெண் மயங்கி விழுந்து திடீர் சாவு
Published on

உத்தமபாளையம் ஆர்.சி வடக்கு தெருவை சேர்ந்தவர் வினித் (வயது 24). கூலித்தொழிலாளி. இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள காசாம்பட்டியை சேர்ந்த சத்யா (21) என்பவருக்கும் கடந்த 1 மாதத்திற்கு முன்பு திருமணமானது. இந்நிலையில் இன்று வினித் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் வினித்தின் பெற்றோருடன் சத்யா இருந்தார்.

இதற்கிடையே சத்யா திடீரென மயங்கி விழுந்ததாக அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர்.

அப்போது சத்யாவின் உறவினர்கள் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யக்கோரி மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதையடுத்து அவர்களிடம் இன்ஸ்பெக்டர் சிலைமணி பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உத்தமபாளையம் மருத்துவமனையில் போதுமான வசதி இல்லாததால் பிரேத பரிசோதனை செய்ய முடியாது. தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் குளிர்சாதன பெட்டி மற்றும் ஆய்வகங்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளதால் அங்கு கொண்டு செல்வது தான் நல்லது என்று கூறினார். இதையடுத்து உறவினர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதுகுறித்து போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com