கொலை வழக்கில் 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கேரளாவில் கைது

கொலை வழக்கில் 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கேரளாவில் கைது
கொலை வழக்கில் 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கேரளாவில் கைது
Published on

கருங்கல், 

கருங்கல் அருகே ஐரேனிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜான் சதீஷ் குமார். இவரை அதே பகுதியை சேர்ந்த மரிய அந்தோணி என்ற தாசன் (53) உள்பட 3 பேர் முன்விரோதம் காரணமாக 2009-ம் ஆண்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாசன் என்பவரை சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியே வந்த தாசன் 13 ஆண்டுகளாக தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்போஸ்கோ தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அவர்கள் திருவனந்தபுரம் சென்று அங்கு பதுங்கி இருந்த தாசனை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com