கடலூரில் சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை போலீசார் விசாரணை

கடலூரில் சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூரில் சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை போலீசார் விசாரணை
Published on

கடலூர் பாதிரிக்குப்பத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் சந்தியா (வயது 21). இவர் விழுப்புரத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் எல்.எல்.பி. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று சந்தியா தனது தாயார் உமாராணியிடம், படிப்பு செலவிற்கு பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவர், தற்போது தன்னிடம் பணம் இல்லை என்றும், யாரிடமாவது விரைவில் வாங்கி தருகிறேன் என கூறியதாக தெரிகிறது.

இதில் மனமுடைந்த சந்தியா, விஷத்தை குடித்து விட்டார். பின்னர் அவர் தான் விஷம் குடித்தது பற்றி தனது தாயாரிடம் கூறினார். இதை கேட்டு பதறிய உமாராணி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

போலீசார் விசாரணை

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உமாராணி, திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தியாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com