கோபியில்மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

தற்கொலை
கோபியில்மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
Published on

கோபி ஸ்ரீ நகரை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 70). இவருடைய கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணம் ஆகி குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். தனியாக வசித்த சரஸ்வதி கூலி வேலை செய்து வந்தார். இவர் அடிக்கடி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை.

இதனால் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த அவர் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் கருகிய நிலையில் அலறி துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சரஸ்வதி இறந்தார்.

இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com