மானாமதுரையில் வங்கியில் கொலை முயற்சியில் ஈடுபட முயன்றவர்கள் மீது காவலாளி துப்பாக்கி சூடு

மானாமதுரையில் வங்கியில் கொலை முயற்சியில் ஈடுபட முயன்றவர்கள் மீது காவலாளி துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார்.
மானாமதுரையில் வங்கியில் கொலை முயற்சியில் ஈடுபட முயன்றவர்கள் மீது காவலாளி துப்பாக்கி சூடு
Published on

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள கனரா வங்கியில் தங்கமணி என்பவர் காவலாளியாக பணியாற்றி வந்தார். இன்று காலை

5 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை தாக்கி கொலை செய்யும் முயற்சியில் இறங்கியது. அப்போது அவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை பயன்படுத்தி கொலை முயற்சியில் ஈடுபட முயன்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார். வங்கி காவலாளி சுட்டதில் தமிழ் செல்வம் என்பவர் காயம் அடைந்தார். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக முன்னாள் ஒன்றிய செயலாளர் சரவணன் என்பவர் கொலைக்கு பழிவாங்க இந்த கொலை முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com